பயணத் தடைக்கு பின்னர் இந்தியாவின் முதல் விமானம் அவுஸ்திரேலியாவில் தரையிறங்கியது - News View

About Us

About Us

Breaking

Sunday, May 16, 2021

பயணத் தடைக்கு பின்னர் இந்தியாவின் முதல் விமானம் அவுஸ்திரேலியாவில் தரையிறங்கியது

இந்தியாவில் சிக்கித்தவித்த அவுஸ்திரேலியர்களை சொந்த நாட்டில் கொண்டு போய்ச்சேர்ப்பதற்கான முதல் விமானம் அவுஸ்திரேலியா சென்றடைந்தது.

இந்தியாவில் கொரோனாவின் 2ஆவது அலை காட்டுத்தீயாய் பரவத் தொடங்கிய போது அவுஸ்திரேலியா அதிரடியாக பயணத் தடை விதித்தது. 

இதன்படி அவுஸ்திரேலியர்கள், இந்தியாவில் இருந்து தடையை மீறி நாடு திரும்பினால் 5 ஆண்டு வரை சிறையும், 66 ஆயிரம் அவுஸ்திரேலிய டொலர்கள் வரையில் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்தது. இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. 

ஆனால் இந்த பயணத் தடை நன்றாக வேலை செய்ததாக அவுஸ்திரேலியாவின் பிரதமர் ஸ்காட் மோரீசன் தெரிவித்தார்.

இந்த தடை உத்தரவு முடிவுக்கு வந்த நிலையில் இந்தியாவில் சிக்கித்தவித்த அவுஸ்திரேலியர்களை சொந்த நாட்டில் கொண்டு போய்ச்சேர்ப்பதற்கான முதல் விமானம் தயாரானது. 

இதில் 150 பேர் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 80 பேர் மட்டுமே பயணித்தனர். எஞ்சியவர்களில் பெரும்பாலோர் கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானதால் பயணிக்க முடியாமல் போய்விட்டது என இந்தியாவுக்கான அவுஸ்திரேலிய தூதர் பேரி ஓ பேரல் தெரிவித்தார். 

இந்த விமானம் நேற்று அவுஸ்திரேலியாவின் டார்வின் போய் தரை இறங்கியது.

இந்த விமானம் அவுஸ்திரேலியர்களை ஏற்றிச்செல்ல டெல்லி வந்தபோது, அவுஸ்திரேலியாவில் இருந்து 1,056 வென்டிலேட்டர்கள், 60 ஒக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் மருத்துவ கருவிகளை எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment