ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது ஜனநாயக இடதுசாரி முன்னணியின் மக்கள் மைய பிரகடனம் - News View

About Us

About Us

Breaking

Friday, May 7, 2021

ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது ஜனநாயக இடதுசாரி முன்னணியின் மக்கள் மைய பிரகடனம்

(எம்.மனோசித்ரா)

தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்தல், நட்புறவுடனான அணிசேரா வெளியுறவுக் கொள்கையை நடைமுறைப்படுத்துதல், ஊழல் மற்றும் மோசடிகள் இல்லாத தூய்மையான அரச நிர்வாகத்தை கட்டியெழுப்புதல் மற்றும் மக்களுக்கு பொறுப்பு கூறும் அரசியலமைப்பு சீர்திருத்தம் ஆகிய விடயங்களை உள்ளடக்கிய ஜனநாயக இடதுசாரி முன்னணியின் மக்கள் மைய பிரகடனம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

'சுபீட்சத்தின் நோக்கு' நிகழ்ச்சித்திட்டத்தை முன் கொண்டு செல்வதற்காக தயாரித்த குறித்த மக்கள் மைய பிரகடனத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் இன்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஜனாதிபதியிடம் கையளித்தார்.

தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்தல், நட்புறவுடனான அணிசேரா வெளியுறவுக் கொள்கையை நடைமுறைப்படுத்துதல், ஊழல் மற்றும் மோசடிகள் இல்லாத தூய்மையான அரச நிர்வாகத்தை கட்டியெழுப்புதல் மற்றும் மக்களுக்கு பொறுப்பு கூறும் அரசியலமைப்பு சீர்திருத்தம் ஆகியவை உள்ளிட்ட 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கை பிரகடனத்தில் கூறப்பட்டுள்ள பல விடயங்கள் குறித்த கட்சியின் கொள்கைகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இப்பிரகடனத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டம் குறித்து கிராமிய மக்களுக்கு அறிவூட்டுவதற்காக அரசியல் மற்றும் சமூக ஆர்வலர்களை அணிதிரட்டுவதற்காக 100 கருத்தரங்குகளை நடத்த ஜனநாயக இடதுசாரி முன்னணி திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment