அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த சசிகலா முயற்சிக்கிறார் - குற்றம் சாட்டியுள்ள கே.பி. முனுசாமி - News View

About Us

About Us

Breaking

Monday, May 31, 2021

அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த சசிகலா முயற்சிக்கிறார் - குற்றம் சாட்டியுள்ள கே.பி. முனுசாமி

அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த சசிகலா முயல்வதாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.பி. முனுசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக கிருஷ்ணகிரியில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, 'சசிகலாவிற்கும், அதிமுகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் கட்சியிலும் இல்லை. அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கருத்துகளை சசிகலா சொல்லி வருகிறார்.

இதற்கு அதிமுகவின் தொண்டர்கள் செவிசாய்க்க மாட்டார்கள். ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்கள் இந்த இயக்கத்தை காத்து வருகின்றனர்.

அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த இதுபோல் சசிகலா செய்து வருகின்றார். அதிமுகவின் எந்த தொண்டனும் சசிகலாவிடம் பேச வில்லை. மாறாக சசிகலா தான் போன் செய்து பேசுகிறார்.

சசிகலாவிடம் உள்ளவர்கள் குழப்பத்தை ஏற்படுத்த, சசிகலாவை தூண்டி விடுகின்றனர். இதனை சசிகலா அறிந்துகொள்ள வேண்டும். அம்மாவின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுமானால் சசிகலா அமைதியாக இருக்கவேண்டும்.' என்றார்.

No comments:

Post a Comment