நாமலுக்கும் தடுப்பூசிக்கும் என்ன சம்பந்தம்? : விளையாட்டுத்துறை அமைச்சர் அனைத்தையும் விளையாட்டாகவே செய்கின்றார் - எம்.எ.சுமந்திரன் - News View

About Us

About Us

Breaking

Monday, May 31, 2021

நாமலுக்கும் தடுப்பூசிக்கும் என்ன சம்பந்தம்? : விளையாட்டுத்துறை அமைச்சர் அனைத்தையும் விளையாட்டாகவே செய்கின்றார் - எம்.எ.சுமந்திரன்

(ஆர்.யசி)

நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நாமல் ராஜபக்ஷவிற்கு மாத்திரம் எவ்வாறு பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது. விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் தடுப்பூசி ஏற்றும் பணிகளுக்கும் உள்ள தொடர்பு என்னவென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் கேள்வி எழுப்பினர்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை கூறினார். 

அவர் மேலும் கூறுகையில், நாட்டில் தடுப்பூசிகளையேற்றும் செயற்பாடுகளில் அரசாங்கம் பாகுபாடு காட்டுகின்றது. அதுமட்டுமல்ல யாழ்ப்பாணத்திற்கு தடுப்பூசி அனுப்புவதாக அரசாங்கம் அறிவித்ததையடுத்து 50 ஆயிரம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. அதனை விளையாட்டுத்துறை அமைச்சர் யாழ்ப்பாணத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் தடுப்பூசி ஏற்றும் செயற்பாட்டிற்கும் என்ன தொடர்புகள் இருக்கின்றது என தெரியவில்லை.

அதுமட்டுமல்ல நாடளாவிய ரீதியில் பயணகட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நாமல் ராஜபக்ஷவிற்கு மாத்திரம் எவ்வாறு பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது. நாட்டில் எவருக்குமே வீதிகளில் செல்ல முடியாது என கூறப்படுகின்றவேளையில் அவருக்கு இந்த கட்டுப்பாடுகள் இல்லையா என்பதை அரசாங்கத்திடம் கேட்கிறேன்.

நாளாந்த தொழிலில் ஈடுபடும் அனைவரும் வீடுகளில் முடக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு இருக்கையில் இவர் மாத்திரம் நடமாடுவது அனுமதிக்கப்படக்கூடியதா? விளையாட்டுத்துறை அமைச்சர் அனைத்தையும் விளையாட்டாகவே செய்கின்றார்.

மேலும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் பெற்றுக் கொடுக்கப்படும் என்ற காரணி குறித்து எந்தவித அறிவிப்பும் எமக்கு கிடைக்கவில்லை. செய்திகளில் இந்த காரணிகளை எம்மால் பார்க்க முடிந்தது, உண்மையில் இப்போதுள்ள நாட்டின் நிலைமையில் வாகனங்கள் பெற்றுக் கொடுக்க வேண்டியது அவசியமா என்ற கேள்வி எம்மத்தியில் உள்ளது. 

மக்களுக்கான தடுப்பூசிகளை பெற்றுக் கொடுக்கவே முடியாத நிலையில் வாகனம் கொள்வனவு எதற்கு. சாதாராண சூழலில் இவற்றை செய்வதில் எம்மத்தியில் எதிர்ப்பில்லை, ஆனால் இப்போது அவசியமில்லை என்றார்.

No comments:

Post a Comment