இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக மஞ்சள், விதை வெங்காயம் கடத்தி வந்த இருவரை விஷேட அதிரடிப் படையினர் நீர்கொழும்பில் கைது செய்துள்ளனர். மூன்று மோட்டார் படகுகளும் கைபற்றப்பட்டன.
நீர்கொழும்பு பிரதேச கடற்கரையில் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக பொருட்களை கடத்தி வருவது தொடர்ந்து நடந்துவருகிறது.
விஷேட அதிரடிப் படையினரும், கடற்படையினரும் இதனை கண்காணித்து ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
கோனஹேன விஷேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த படையினர் நடத்திய சோதனையில் நீர்கொழும்பு முன்னக்கரை பிரதேசத்தில் மோட்டர் படகிலிருந்து பொருட்களை இறக்குவதை அவதானித்து அதனை சுற்றிவலைத்த போது மூன்று படகுகளிலிருந்து 525 கிலோ மஞ்சள், 1,100 கிலோ விதை வெங்காயம் என்பன கைபற்றப்பட்டன.
இரு சந்தேகநபர்களை கைது செய்த அதிரடிப் படையினர் மூன்று படகுகளையும் தமது பொறுப்பில் கொண்டுவந்துள்ளனர்.
நீர்கொழும்பு, குட்டிதீவைச் சேர்ந்த இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் பொருட்களையும் சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்காக நீர்கொழும்பு பொலிஸாரிடம் அதிரடிப் படையினர் ஒப்படைத்துள்ளனர்.
No comments:
Post a Comment