அடுத்த வாரம் முதல் 5,000 ரூபா வழங்க நடவடிக்கை - இதற்காக அரசாங்கம் ரூபா 30 பில்லியன் ஒதுக்கீடு - News View

About Us

About Us

Breaking

Friday, May 28, 2021

அடுத்த வாரம் முதல் 5,000 ரூபா வழங்க நடவடிக்கை - இதற்காக அரசாங்கம் ரூபா 30 பில்லியன் ஒதுக்கீடு

ஜூன் 02 முதல் ரூ. 5,000 வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

சமுர்த்தி பயனாளிகள், குறைந்த வருமானம் பெறுவோராக அடையாளம் காணப்பட்டுள்ள குடும்பங்கள், முதியோர் கொடுப்பனவை பெறுவோர் அங்கம் வகிக்கும் குடும்பங்கள், விசேட தேவையுடையோருக்கான கொடுப்பனவை பெறுவோர் அங்கம் வகிக்கும் குடும்பங்கள், சிறுநீரக நோய் நிலைமைக்கான கொடுப்பனவை பெறுவோர் அங்கம் வகிக்கும் குடும்பங்கள், நூற்றாண்டு பூர்த்திக்கான முதியோர் கொடுப்பனவை பெறுவோர் அங்கம் வகிக்கும் குடும்பங்கள் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் தெரிவு செய்யப்பட்டோருக்கு இவ்வாறு ரூ. 5,000 கொடுப்பனவை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக, சமுர்த்தி, வதிவிடப் பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில் மற்றும் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க அறிவித்துள்ளார்.

இதற்காக அரசாங்கம் ரூபா 30 பில்லியனை ஒதுக்கீடு செய்யவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment