கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக கடந்த நாட்களாக நாட்டின் பல கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன.
அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட பல பகுதிகளின் 4 கிராம சேவகர் பிரிவுகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இவ்வாறு உடன் அமுலாகும் வகையில் களுத்துறை மாவட்டத்தின் 4 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
களுத்துறை மாவட்டத்தின் இங்குருதலுவ, பெலவத்த கிழக்கு, மிரிஸ்வத்த மற்றும் பஹல ஹேவெஸ்ஸ ஆகிய கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment