கொவிட் கூட்டு ஒத்துழைப்பை ஒருங்கிணைப்பதற்கான பிராந்திய மட்ட செயற்பாட்டில் இலங்கை - சீனா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்கள் பங்கேற்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 28, 2021

கொவிட் கூட்டு ஒத்துழைப்பை ஒருங்கிணைப்பதற்கான பிராந்திய மட்ட செயற்பாட்டில் இலங்கை - சீனா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்கள் பங்கேற்பு

கொவிட்-19 க்கு பிரதிபலிப்பது குறித்த சீனா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு அமைச்சர்களுடனான கூட்டு வீடியோ மாநாட்டில் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று பங்கேற்றார்.

கொவிட்-19 க்கான பிரதிபலிப்பு சார்ந்த ஒத்துழைப்பைப் பலப்படுத்துதல் மற்றும் தொற்றுநோய்க்குப் பிந்தைய பொருளாதார மீட்சியை ஊக்குவித்தல் மற்றும் கொவிட்-19 தொற்றுநோயின் அண்மைய அதிகரிப்புக்கு மத்தியிலான வறுமை ஒழிப்பு ஆகியன தொடர்பில் இந்தக் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது.

தனது கருத்துக்களைத் தெரிவித்த அமைச்சர் குணவர்தன, கொவிட்-19 க்கு திறம்பட பிரதிபலிப்பதிலான ஒத்துழைப்பின் முக்கியமான தேவையை அடிக்கோடிட்டுக் காட்டினார்.

பொருளாதார மீட்சி மற்றும் கிராமப்புற வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதில் தேசிய முன்னுரிமைகளை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கு நாடுகளுக்கு உதவும் வகையில், கொவிட்-19 தொற்றுநோயால் முன்வைக்கப்படும் சவால்களை எதிர்கொள்வதன் முக்கியத்துவத்தையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும், ஐ.நா. மற்றும் உலக சுகாதார தாபனத்தின் வழிகாட்டுதலின் கீழ், தேவைகளையுடைய நாடுகளுக்கு முக்கியமான மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் நிலையாகவும், சமமான அளவிலும் கிடைப்பதனைப் பராமரிப்பதற்குத் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என அமைச்சர் குணவர்தன மீண்டும் வலியுறுத்தினார்.

இயற்கை மற்றும் ஏனைய பேரழிவுகளின் போது அவசரத் தேவைகளை வழங்குதல், தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கருவிகளின் பயன்பாடு மற்றும் கிராமப்புறப் பொருளாதாரங்களில் வறுமை ஒழிப்புக்கான தளங்கள் போன்றன தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பதற்கான ஒரு செயன்முறை மையமான விடயமாக அமைதல் வேண்டும் என பங்கேற்பாளர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

மன்ற உறுப்பினர் வாங் யி (சீனா), மிர்வாய்ஸ் நாப் (ஆப்கானிஸ்தான்), ஏ.கே. அப்துல் மேமன் (பங்களாதேஷ்), பிரதீப் குமார் கியாவலி (நேபாளம்) மற்றும் மக்தூம் ஷா மஹ்மூத் குரேஷி (பாகிஸ்தான்) ஆகியோர் பங்கேற்ற நாடுகளைச் சார்ந்த வெளிநாட்டு அமைச்சர்களாவர்.

No comments:

Post a Comment