எமது நாட்டுக்கு புதிய துறைகளை கற்ற துறை சார்ந்தவர்கள் அதிகளவில் தேவைப்படுகிறார்கள் - பம்பலப்பிட்டி அமேசன் உயர் கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் சுசில் - News View

About Us

About Us

Breaking

Saturday, April 24, 2021

எமது நாட்டுக்கு புதிய துறைகளை கற்ற துறை சார்ந்தவர்கள் அதிகளவில் தேவைப்படுகிறார்கள் - பம்பலப்பிட்டி அமேசன் உயர் கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் சுசில்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

பம்பலப்பிட்டி அமேசன் உயர் கல்வி நிறுவனத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மிகவும் சிறப்பான முறையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கலந்துகொண்டார்.

விசேட அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், மாலைதீவுக்கான தூதுவர் ஒமர் ரஸ்ஸாக், பிரதித் தூதுவர் அஸ்லம் சாகிர், சிறைச்சாலை ஆணையாளர் மலின் லியனகே, மனித உரிமைகள் அமைப்பின் ஆளுநர் எ.ஜே. மொஹமட் பாய்ஸ், கொழும்பு பல்கலைக்கழக முன்னாள் பீடாதிபதி எஸ். சந்திரசேகரம் ஆகியோருடன் பல உள்நாட்டு, வெளிநாட்டு கல்விமான்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உரையாற்றும் போது, எமது நாட்டிலுள்ள பல வளங்களை இன்னும் சரியாக நிர்வகிக்க முடியாத நிலை காணப்பட்டு வருகிறது என்றும், ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் எமது நாட்டுக்கு புதிய துறைகளை கற்ற துறை சார்ந்தவர்கள் அதிகளவில் தேவைப்படுகிறார்கள். இதனை அரசாங்கத்தினால் மற்றும் செய்துவிட முடியாது எனவும் இன்று இலங்கையின் பொருளாதார கல்வி வளர்ச்சியில் கணிசமான பங்கினை தனியார் துறையினரே வழங்கி வருகின்றனர் என்றும் அந்த வகையில் அமேசன் உயர் கல்வி நிறுவனத்தின் சேவை உண்மையில் பாராட்டத்தக்கது என்றும் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஆண்டுகளில் உலகிலேயே அதிகமாக தேவைப்படுகின்ற தொழிற்துறையான Robertic Engineering,Green Technology, Solor Technology, Hybrid technology, Cloud Computing, Automated System, Mobile Technology, Wireless technology, போன்ற துறைகளுடன் தொடர்புடைய பாடநெகளையும் வெகுவிரைவில் ஆரம்பிக்கவுள்ளோம் என அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் இல்ஹாம் மரிக்கார் தனது வரவேற்புரையில் குறிப்பிட்டார்.

உலகை மாற்றுவதற்கான முதல் சக்தி கல்வி அறிவாகும். எவருக்கு நல்ல கல்வி அறிவு ஞானம் இருக்கிறதோ அவர்கள் எந்தத் துறையில் பயணித்தாலும் வெற்றி பெறுவது நிச்சயம். இந்த அடிப்படையில் பம்பலப்பிட்டி அமேசன் உயர்கல்வி நிறுவனம் சுமார் 10 வருடங்களாக ஏனைய கல்வி நிறுவனங்களை விடவும் மாறுபட்ட முறையில் தனது கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அமேசன் உயர் கல்வி நிறுவனமானது கல்வியோடு மட்டுமன்றி, பல சமூக சேவைகளையும், பல இலவச புலமைப்பரிசில் திட்டங்களையும் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வெறும் புத்தகக் கல்வியை மட்டும் மையமாகக் கொள்ளாமல், மாணவர்களுக்கிடையே சுய வேலைத்திட்டங்கள், (Individual Project)பயிற்சி பட்டறைகள் (practical workshops), வெளிநாட்டு மாணவர்களின் தொடர்பாடல், (Foreign Students exchange), பல உள்நாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை கை சாத்தி, மாணவர்களுக்கு Individual Training போன்றவற்றை வழங்கி தொழில் சந்தைக்கு ஏற்றவாறு மாணவர்களை தயாரித்து அனுப்புவது விசேட அம்சமாகும்.

இப் பட்டமளிப்பு விழாவில் சுமார் 140 மாணவர்கள் தங்களுடைய சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.

இவற்றில் உளவியலும் உளவளத்துணையும், ஆசிரியர் பயிற்சி நெறி, தகவல் தொழில்நுட்பம், கணக்கியல், இதுபோன்ற பல துறைகளும் உள்ளடக்கப்பட்டிருந்தன.

நிகழ்வில் பங்கேற்ற அனைத்து அதிதிகளுக்கும், சிறந்த புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கும் மற்றும் சிறந்த விரிவுரையாளர்களுக்கும் , இணை நிறுவனங்களுக்கும் விசேட நினைவுச்சின்னங்கள் அமேசன் உயர் கல்வி நிறுவத்தின் நிறைவேற்று பணிப்பாளர் இல்ஹாம் மரைக்காரினால் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment