(எம்.மனோசித்ரா)
போதைப் பொருள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் சுற்றிவளைப்புக்களில் ஹெரோயின் மற்றும் கஞ்சாவுடன் 8 சந்தேநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் றோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் மொரவௌ பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 40 கிராம் ஹெரோயினுடன் 38 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேபோன்று திட்டமிட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் மொரட்டுமுல்ல பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 30 கிராம் ஹெரோயினுடன் 56 வயதுடைய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப் படையினரால் மீட்டியாகொட பொலிஸ் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட 3 சுற்றிவளைப்புக்களில் 12 கிராம் ஹெரோயினுடன் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெல்லம்பிட்டி பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பில் 1 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபரொருவரும், ஜாஎல பிரதேசத்தில் 2 கிலோ கஞ்சாவுடன் சந்தேக நபரொருவரும், கல்கிஸை பிரதேசத்தில் 900 கிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
No comments:
Post a Comment