பிரத்தியேக வகுப்புக்குச் சென்று வீடு திரும்பிய 9 வயதுச் சிறுமி பலி - கிண்ணியாவில் சம்பவம் - News View

About Us

About Us

Breaking

Monday, April 26, 2021

பிரத்தியேக வகுப்புக்குச் சென்று வீடு திரும்பிய 9 வயதுச் சிறுமி பலி - கிண்ணியாவில் சம்பவம்

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேசத்தில் இன்று (26) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒன்பது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று (26) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் பலியானவர் காக்காமுனை அரை ஏக்கர் பகுதியைச் சேர்ந்த குத்புள்ளாஹ் பாத்திமா நிஹா என கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

காலையில் பிரத்தியேக வகுப்புக்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருக்கும் வேளையில் எதிரே வந்த கென்டர் ரக வாகனமொன்று மோதியதில் சிறுமி படுகாயமடைந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சிறுமி கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து உயிரிழந்துள்ளார்.

பின்னர் சிறுமியின் சடலம் அங்கிருந்து பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கிண்ணியா காக்காமுனையைச் சேர்ந்த லொறிச் சாரதி பொலிஸில் சரணடைந்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

(கியாஸ், அப்துல்சலாம் யாசீம்)

No comments:

Post a Comment