சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ள இலங்கை லெஜெண்ட்ஸ் அணியினர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 31, 2021

சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ள இலங்கை லெஜெண்ட்ஸ் அணியினர்

(எம்.எம்.சில்வெஸ்டர்)

சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட நால்வருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அண்மையில் நடைபெற்று முடிந்த வீதி பாதுகாப்பு உலகத் தொடரில் பங்கேற்ற இலங்கை லெஜெண்ட்ஸ் அணியில் இடம்பெற்ற அனைவரும் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியாவின் ராய்ப்பூரில் நடைபெற்ற இப்போட்டித் தொடரில் பங்கேற்ற இந்திய லெஜெண்ட்ஸ் அணியின் சச்சின் டெண்டுல்கர், யூசுப் பத்தான், சுப்பிரமணியம் பத்ரிநாத், இர்பான் பத்தான் ஆகிய நால்வருக்கு கொவிட் 19 கொரோனா தொற்று உறுதியானதை அடுத்தே, இப்போட்டித் தொடரில் பங்கேற்ற இலங்கை லெஜென்ட்ஸ் அணியினரும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்படி எதிர்வரும் சனிக்கிழமை வரை சுய தனிமைப்படுத்தலில் இருக்கும்படி சுகாதரப் பிரிவு ஆலோசனை விடுத்துள்ளதுடன், சுய தனிமைப்படுத்தலின் நிறைவில் மீண்டுமொரு பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்படும் என சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment