கொழும்பில் அமைக்கப்பட்டிருந்த சூழலியல் பற்றிய சுவரோவியம் அகற்றப்பட்டது! - News View

About Us

About Us

Breaking

Friday, March 19, 2021

கொழும்பில் அமைக்கப்பட்டிருந்த சூழலியல் பற்றிய சுவரோவியம் அகற்றப்பட்டது!

கொழும்பில் அமைந்துள்ள நெலும் பொகுன மஹிந்த ராஜபக்ஷ அரங்கத்திற்கு எதிரே உள்ள விஹார மகா தேவி பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த சூழலியல் பற்றிய சுவரோவியம் சுற்றுச் சூழல் காவல் பிரிவினரால் இன்று காலை அகற்றப்பட்டது.

வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் இளைஞர் பிரிவினர் வரைந்த இந்த சுவரோவியம் சர்வதேச காலநிலை நடவடிக்கை தினத்தை முன்னிட்டு அமைக்கப்பட்டது.

வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் இளைஞர் பிரிவு ஏற்பாடு செய்த உலகளாவிய காலநிலை நடவடிக்கைக்கான பொது விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இது இருந்தது.

இலங்கை முழுவதும் முன்னோடியில்லாத வகையில் சுற்றுச்சூழல் அழிவு விகிதம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த ஓவியம் காட்சிப்படுத்தப்பட்டது.

ஜனாதிபதி அலுவலகம் வழங்கிய அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து இந்த ஓவியம் அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment