கிளிநொச்சி - அப்பாள் குளம் பகுதியில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம் : விசாரணைகள் தீவிரம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 9, 2021

கிளிநொச்சி - அப்பாள் குளம் பகுதியில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம் : விசாரணைகள் தீவிரம்

கிளிநொச்சி அப்பாள் குளம் பகுதியில் பெண்ணொருவர் சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார். 

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பாள் குளம் பகுதியிலேயே இவ்வாறு பெண்ணின் சடலம் கரையொதுங்கியுள்ளது.

குறித்த பெண் 30 வயது மதிக்கதக்கவர் என்பதுடன், பாதணிகள், கைப்பை ஆகியனவும் சடலத்துடன் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணின் மரணம் தொடர்பிலான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் ஆரம்பித்துள்ளனர். 

சடலத்தை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பார்வையிட்டதன் பின்னர் மரண விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment