காங்கேசன்துறை - காரைக்கால் பயணிகள் கப்பல் சேவைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து - News View

About Us

About Us

Breaking

Monday, March 1, 2021

காங்கேசன்துறை - காரைக்கால் பயணிகள் கப்பல் சேவைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

இந்தியாவின் காரைக்காலுக்கும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று இந்திய அரசின் சாகர்மாலா அபிவிருத்தி நிறுவனத்திற்கும் (Sagarmala Development Company Ltd), இந்த்ஶ்ரீ பயணிகள் கப்பல் தனியார் நிறவனத்திற்கும் (INDSRI FERRY SERVICES PVT LTD) இடையில் இன்று கைச்சாத்தானது.

இதில் சாகர்மாலா அபிவிருத்தி நிறுவனத்தின் சார்பில் அதன் முகாமைத்துவ பணிப்பாளர் திரு திலீப்குமார் குப்தா. இந்த்ஶ்ரீ பயணிகள் கப்பல் சேவை சார்பில் சோ நிரஞ்சன் ந ந்தகோபன் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

இரு நாடுகளுக்கிடையலும் பயணிகள் போக்குவரத்து சுமுகமாக தொடங்கியதும் இந்த சேவையை விரைந்து ஆரம்பிக்க இருப்பதாக நிரஞ்சன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment