மீறா விளையாட்டு கழகத்தினால் பிரதேச ஊடகவியலாளர்கள் கௌரவிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 31, 2021

மீறா விளையாட்டு கழகத்தினால் பிரதேச ஊடகவியலாளர்கள் கௌரவிப்பு

எஸ்.எம்.எம்.முர்ஷித்

கோறளைப்பற்று மேற்கு, பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீறாவோடை மீறா விளையாட்டு கழகத்தின் வருடாந்த ஒன்று கூடலும் பிரதேசத்தின் முக்கியஸ்தர்கள் கௌரவிப்பு நிகழ்வும் பொத்தானை பிரதேசத்தில் இடம்பெற்றது.

கழகத்தின் தலைவர் ஐ.எம்.றிஸ்வின் தலைமையில் இடம்பெற்றபோது பிரதேச ஊடகவியலாளர்களான எஸ்.எம்.எம்.முர்ஷித், எம்.ரீ.எம்.பாரிஸ், ஏ.எஸ்.எம்.சதீக், எச்.எம்.எம்.பர்ஸான் ஆகியோர்கள் கௌரவிக்கப்பட்டனர். 

அத்துடன், கழகத்தின் வளர்ச்சிக்காக உழைத்தவர்களும் கழகத்தின் ஆலோசகர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment