இந்திய உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட குழுவினரின் வடக்கு, தென் பகுதி விஜயங்களுக்கான நோக்கம் என்ன ? - கேள்வி எழுப்பினார் மரிக்கார் - News View
  • Home
  • about us
  • contact us

News View

About Us

About Us
    • உள்நாடு
    • அரசியல்
    • கல்வி
    • வெளிநாடு
    • விளையாட்டு
    • தொழிநுட்பம்
    • கட்டுரைகள்
    • சினிமா

    Breaking

    Thursday, March 18, 2021

    Home அரசியல் இந்திய உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட குழுவினரின் வடக்கு, தென் பகுதி விஜயங்களுக்கான நோக்கம் என்ன ? - கேள்வி எழுப்பினார் மரிக்கார்

    இந்திய உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட குழுவினரின் வடக்கு, தென் பகுதி விஜயங்களுக்கான நோக்கம் என்ன ? - கேள்வி எழுப்பினார் மரிக்கார்

    Newsview March 18, 2021 அரசியல்,
    (எம்.மனோசித்ரா)

    அரசியலமைப்பு ரீதியாக இந்தியாவிற்கு ஏற்ற வகையில் இலங்கையை நிர்வகிப்பதற்கு மறைமுகமான சதி முன்னெடுக்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

    மேலும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட குழுவினரின் வடக்கு மற்றும் தென் பகுதிகளுக்கு மேற்கொண்டுள்ள விஜயங்களுக்கான நோக்கத்தினை தெளிவாக தெரிந்து கொள்ள விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

    கொழும்பிலுள்ள எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

    அவர் மேலும் கூறுகையில், பாரதிய ஜனதாக கட்சி இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில், அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சி தமிழ் நாட்டில் அதிகாரத்திலுள்ளது. குறித்த கட்சியின் யாப்பில் இலங்கையில் ஈழ ஆட்சியை ஸ்தாபிப்பது தொடர்பில் கூறப்பட்டுள்ளது.

    20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக இரட்டை குடியுரிமையுடையவர்களுக்கு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற ஏற்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது. இலங்கையில் ஈழ இராச்சியம் அமைக்கப்படும் என்று கூறும் கட்சியினர் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சிங்கள மொழியிலும் பேசிக் கொண்டு, யாழ்ப்பாணம் மற்றும் காலி உள்ளிட்ட பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இது நாட்டில் காணப்படும் பாரிய சவாலாகும். 

    போலியான தேசப்பற்று தொடர்பில் கூறிக் கொண்டிருக்கும் தற்போதைய அரசாங்கம், இந்தியாவிற்கு அடிபணிந்துள்ளமையின் காரணமாகவா இது தொடர்பில் அவதானம் செலுத்தாமலுள்ளது ? உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட குழுவினரின் செயற்பாடுகளுக்கான காரணம் குறித்து தெளிவாக தெரிந்து கொள்ள விரும்புகின்றோம்.

    இரட்டை குடியுரிமையுடையவர்களுக்கு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பளிப்பதன் ஊடாக, வடக்கு கிழக்கினுள் ஈழ இராச்சியத்தை ஸ்தாபிக்க எதிர்பார்த்துள்ளவர்களுக்கு பாராளுமன்றத்திற்கு தெரிவாகுவதற்கான வழி ஏற்படுத்திக் கொடுக்கப்படுகிறது. அதற்கமைய அரசியலமைப்பினூடான அதிகாரத்துடன் இந்தியாவிற்கு ஏற்ற வகையில் இலங்கையை நிர்வகிப்பதற்கு மறைமுகமான சதி முன்னெடுக்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது.

    எவ்வாறிருப்பினும் அரசாங்கத்திற்கு இவ்வாறானதொரு நிலைமையை நாட்டில் ஏற்படுத்துவதற்கான தேவை காணப்பட்டாலும், நாட்டின் பிரதான எதிர்க்கட்சி என்ற ரீதியில் மக்கள் மத்தியில் சென்று நேரடியாக இது தொடர்பில் தெளிவுபடுத்துவோம். இதன் மூலம் எமது நாட்டின் ஒற்றுமை, சுயாதீனத்தன்மை, இறையான்மை, புவியியல் ஒருமைப்பாடு என்பவற்றை பாதுகாப்பதற்கான போராட்டத்தை கீழ் மட்டத்திலிருந்து முன்னெடுக்க தயாராகவுள்ளோம் என்றார்.

    Tags # அரசியல்
    Share This
    Author Image

    About Newsview

    அரசியல்
    Author - Newsview at March 18, 2021
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Tags அரசியல்

    No comments:

    Post a Comment

    Newer Post Older Post Home
    Subscribe to: Post Comments (Atom)

    Author Details

    Variables / Comments

    • disqusShortname
    • commentsSystem

    Entertainment

    TrendsTen
    all right reserved. develop by max mithun khan. Powered by Blogger.

    Labels

    • அரசியல்
    • உள்நாடு
    • கட்டுரைகள்
    • கல்வி
    • சினிமா
    • தொழிநுட்பம்
    • விளையாட்டு
    • வெளிநாடு

    Follow Us On Facebook

    Eastern CM Speech

    popular

    • எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு
      எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு
      மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) இன்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எர...
    • தேர்தலில் போட்டியிட்ட 2,600 வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - தேர்தல் ஆணையாள
      தேர்தலில் போட்டியிட்ட 2,600 வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - தேர்தல் ஆணையாள
      (எம்.மனோசித்ரா) ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு ஆனால் இதுவரையில் தமது சொத்து விபரங்களை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்...
    • இலங்கை பங்குச் சந்தையில் முதன் முறை சாதனை
      இலங்கை பங்குச் சந்தையில் முதன் முறை சாதனை
      கொழும்பு பங்குச் சந்தையின் வரலாற்றில் முதன் முறையாக அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) 18,000 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இலங்க...
    • வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 22 சிறார்கள் : ஒப்பந்தக்கார பெண்மணி பொலிசாரால் கைது
      வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 22 சிறார்கள் : ஒப்பந்தக்கார பெண்மணி பொலிசாரால் கைது
      உணவு ஒவ்வாமை காரணமாக 22 மாணவர்கள் சுகவீனமுற்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இன்று (30) மட்டக்களப்பு - கரடியனாறு ஆரம்ப பாடசாலையில் குறித்த சம்ப...
    • “பாஸ்போர்ட்” பெறுவதற்கு மீண்டும் டோக்கன் முறை
      “பாஸ்போர்ட்” பெறுவதற்கு மீண்டும் டோக்கன் முறை
      கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொள்வதற்காக இனிமேல் டோக்கன் வழங்கப்படுமென குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.  ஜூலை 02 ஆம் திக...

    Pages

    Total Pageviews

    Contact Form

    Name

    Email *

    Message *

    All Right Reserved by News Views | Design by Max Mithun Khan
    All Rights Reserved By News View | Design by max mithun khan