யாழ்ப்பாணத்தில் தனிமையில் வசித்து வந்தவர் வெட்டிக் கொலை - தீவிர விசாரணையில் பொலிஸார் - News View

About Us

About Us

Breaking

Saturday, March 27, 2021

யாழ்ப்பாணத்தில் தனிமையில் வசித்து வந்தவர் வெட்டிக் கொலை - தீவிர விசாரணையில் பொலிஸார்

யாழ்ப்பாணம் - புத்தூர் வீரவாணி பகுதியில் தனிமையில் வசித்து வந்த ஆணொருவர், இனந்தெரியாத சந்தேகநபர்களினால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் புத்தூர் வீரவாணி பகுதியினைச் சேர்ந்த துரைராசா சந்திரகோபல் (வயது-52) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று (சனிக்கிழமை) அதிகாலையிலேயே குறித்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் முன்பகையே கொலை செய்வதற்கு காரணமாக அமைந்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment