சீன ஜனாதிபதி உட்பட 40 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார் ஜோ பைடன் - News View

About Us

About Us

Breaking

Saturday, March 27, 2021

சீன ஜனாதிபதி உட்பட 40 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார் ஜோ பைடன்

பருவநிலை மெய்நிகர் உச்சி மாநாட்டில் பங்கேற்க 40 நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்காவில் வரும் ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் பருவநிலை மாற்றம் குறித்த மெய்நிகர் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. 

இந்த மாநாட்டில் புதைபடிம எரிபொருள்கள் பயன்பாடு, காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் வெப்பநிலையைக் குறைக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், காலநிலை மாற்ற தடுப்பு நடவடிக்கையின் மூலம் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியப் பிரதமர் மோடி, சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் ஜப்பானிய பிரதமர் யோஷிஹைட் சுகா உள்ளிட்ட 40 நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த ஆண்டு நவம்பரில் கிளாஸ்கோவில் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டிற்கான முக்கிய மைல்கல்லாக இந்த உச்சி மாநாடு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த மாநாட்டின் விவாதங்களை நேரலையாக ஒளிபரப்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment