கற்பிட்டியில் புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 107 கிலோ கேரளா கஞ்சா மீட்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 9, 2021

கற்பிட்டியில் புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 107 கிலோ கேரளா கஞ்சா மீட்பு

கற்பிட்டி சோமைத்தீவு பகுதியில் புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 107 கிலோ 125 கிராம் கேரளா கஞ்சா கற்பிட்டி கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

கடற்படைப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலுக்கமைய நேற்று மாலை குறித்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

இதன்போது சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லையென கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா பொதிகளை மேலதிக விசாரணைகளுக்காக கற்பிட்டிப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment