இன்று (11) பிற்பகல் கோணஹென முகாமைச் சேர்ந்த விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் பல்வேறு ஆயுதங்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (11) பிற்பகல் கட்டான பகுதியில் மேற்கொள்ளப்பட்ட குறித்த சுற்றிவளைப்பிலேயே இவ்வாறு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
12 துளை வகை இரண்டு துப்பாக்கிகள்
9 மி.மீ. வகை தோட்டாக்கள் 267
12 துளை வகை தோட்டாக்கள் 994
7.6 வகை தோட்டாக்கள் 385
38 வகை தோட்டாக்கள் 10
32 வகை தோட்டாக்கள் 17 ஆகியன ஆயுதங்களே இதன்போது மீட்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில், 60 வயது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக, அஜித் ரோஹண தெரிவித்தார்.
குறித்த ஆயுதங்களுடன், சந்தேகநபர் கட்டான பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இவ்விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment