அமெரிக்காவில் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் தான் மீண்டும் போட்டியிடலாம் என முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் 2ஆவது முறையாக ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்ட டிரம்ப், ஜனநாயக கட்சியின் ஜோ பைடனின் தோல்வியை தழுவினார்.
தோல்விக்குப் பிறகு முதல் முறையாக பொது மேடையில் பேசிய டிரம்ப், 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் நான் போட்டியிடலாம் என்று கூறினார்.
டிரம்ப் மேலும் கூறுகையில், நாம் தொடங்கிய இந்த சிறப்பான பயணம் முடிவுக்கு வர வெகுதொலைவு உள்ளது. புதிய கட்சியை துவங்குவதில் விருப்பம் இல்லை.
பைடன் நிர்வாகம் மோசமாக இருக்கப் போகிறது என்பது நமக்கு தெரியும். ஆனால், எந்த அளவு மோசமாக இருக்கப் போகிறது என்பதை நம்மால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. 2024 ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி படுதோல்வியை சந்திக்கும்” என்றார்.
No comments:
Post a Comment