கறுப்பின சிறுமி மீது அமெரிக்க பொலிசார் தாக்குதல் : மீண்டும் எழுந்தது பெரும் சர்ச்சை! - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 2, 2021

கறுப்பின சிறுமி மீது அமெரிக்க பொலிசார் தாக்குதல் : மீண்டும் எழுந்தது பெரும் சர்ச்சை!

அமெரிக்காவில் கறுப்பின சிறுமி மீது பொலிஸார் ஸ்பிரே அடித்த சம்பவம் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

அமெரிக்காவின் வெள்ளையின பொலிஸார் இனப்பாகுபாடு காட்டுவதாகவும் கறுப்பின குற்றவாளிகளிடம் மிகக்கடுமையாக நடந்து கொள்வதாகவும் நீண்ட காலமாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதுண்டு.

இந்நிலையில், தற்போது அமெரிக்காவில் மற்றுமொரு சம்பவம் அரங்கேறி உள்ளது. 

அமெரிக்காவின் ரோச்சஸ்டர் மாகாணத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமியை பொலிஸார் தங்கள் காருக்குள் ஏற்ற முற்பட்டனர். 

அப்போது சிறுமி பொலிஸாரைத் தாக்கியதால் அவரைக் கட்டுப்படுத்த பெப்பர் ஸ்பிரே எனப்படும் காரத்தன்மை கொண்ட ஸ்பிரேயை சிறுமியின் முகத்தில் பொலிஸார் அடித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியைக் கைது செய்த வெள்ளையின பொலிஸ் அதிகாரியான அன்ரே அண்டர்சன் மீது விமர்சனம் எழுந்துள்ளது.

இது தொடர்பாக குறித்த பொலிஸ் அதிகாரி கூறுகையில், மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி எம்மைத் தாக்கியதால் அவரை பத்திரமாக அழைத்துச் செல்ல பெப்பர் ஸ்பிரே பயன்படுத்தியதாகவும், கறுப்பின சிறுமி என்று நாங்கள் பாகுபாட்டை பார்க்கவில்லையெனவும், அவரை வலுக்கட்டயாக நாங்கள் அழைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment