செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கிய நாசா விண்கலத்தை வடிவமைத்த இலங்கை பெண் - News View

About Us

About Us

Breaking

Saturday, February 20, 2021

செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கிய நாசா விண்கலத்தை வடிவமைத்த இலங்கை பெண்

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அனுப்பிய பெர்சிவரன்ஸ் (Perseverance) ரோவர் ஆய்வு ஊர்தி செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது.

வெற்றிகரமாகத் தரையில் இறங்கியுள்ள விண்கலம் அதன் முதலாவது ஒளிப் படத்தை சில நிமிடங்களிலேயே பூமிக்கு அனுப்பியது. 

மண் மாதிரிகளைச் சேகரிக்கின்ற பணியை அதனையடுத்த சில மாதங்களில் ஆரம்பிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

பண்டைய உயிர் வாழ்க்கையின் சுவடுகளை லேஸர் மூலம் ஆய்வு செய்து தரவுகளை அது உடனுக்குடன் பூமிக்கு அனுப்பி வைக்கவுள்ளது.

இந்த விண்கலத்தை வடிவமைக்கும் முக்கிய பணியில் இலங்கையைச் சேர்ந்த பொறியிலாளர் மெலனி மகாராச்சி பணியாற்றியுள்ளார். 

Mars 2020 Perseverance என்ற ரோவர் விண்கலத்தின் உள்ளக மின் அமைப்பினை மெலனி மகாராச்சி வடிவமைத்துள்ளார்.

2003ஆம் ஆண்டு தனது குடும்பத்துடன் மெலனி மகாராச்சி அமெரிக்காவில் குடியேறினார். அங்கு அவர் விண்வெளி பொறியியல் பட்டப்படிப்பை கலிபோர்னியா பல்கலைக்கத்தில் முடித்தார்.

இன்று உலகையே தன்வசம் திரும்பி பார்க்க வைத்துள்ள Tesla நிறுவனத்தின் SpaceX திட்டத்தில் பணிபுரிந்த அவர் பின்னர் போஜிங் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.

2015ஆம் ஆண்டு நாசாவின் குழுவுக்கு தெரிவாகிய "மெலனி மகாராச்சி, Mars 2020 Perseverance திட்டத்தின் "designed the internal electrical" குழுவில் இடம்பிடித்தார்.

இதேவேளை, செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி ஆய்வு மேற்கொள்ளும், ரோவர் விண்கலத்தின் ஆய்வு நடவடிக்கையில் இந்தியாவைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி, டொக்டர் சுவாதி மோகனுக்கு மிகப் பெரிய பங்களிப்பு உள்ளமையும் முக்கிய அம்சமாகும்.

No comments:

Post a Comment