ஆங் சான் சூகியின் முக்கிய உதவியாளர் ஒருவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
79 வயதான வின் ஹெடின் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை உறுதிப்படுத்தியுள்ளது.
ஹெடின், இராணுவ ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதாக பிரச்சாரம் செய்தபோது, கைது செய்யப்பட்டு யாங்கோனில் இருந்து தலைநகர் நய்பிடாவிற்கு ஒரு காரில் பொலிஸ் அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்படுவதாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.
ஆங் சான் சூகியின் வலது கை மனிதராகக் கருதப்படும் வின் ஹெடின் யாங்கோனில் அவரது மகளின் வீட்டிலில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆங் சான் சூகியின் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியின் (என்.எல்.டி) சுமார் 70 பாராளுமன்ற உறுப்பினர்களும் வியாழக்கிழமை இராணுவத்தை எதிர்த்தனர்.
அவர்கள் தலைநகரான நய்பிடாவில் உள்ள ஒரு வளாகத்தில் ஒரு குறியீட்டு பாராளுமன்றத்தை கூட்டி, மக்களுக்கு சேவை செய்வதாக உறுதிமொழியில் கையெழுத்திட்டும் உள்ளனர்.
சூ கீ திங்கட்கிழமை முதல் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மியான்மரில் அரசியல் கைதுகளை கண்காணிக்கும் யாங்கோனை தளமாகக் கொண்ட அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கத்தின் கூற்றுப்படி, ஆட்சி கவிழ்ப்பு தொடர்பாக 130 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் சட்டமியற்றுபவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தும் உள்ளனர்.
No comments:
Post a Comment