இலங்கையில் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில், இதுவரை ஒரு இலட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டதாக, சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்றைய (02) ஐந்தாம் நாளில் 23,217 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டதாக, சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொவிட் தடுப்பூசி வழங்கும் திட்டம் கடந்த ஜனவரி 29 முதல் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதன் அடிப்படையில் இதுவரை மொத்தமாக 118,767 பேருக்கு, இந்தியாவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட AstraZeneca Covishiled தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக, தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment