வெளிநாட்டுப் பணியாளர்கள் தமது முறைப்பாடுகளை இணையத்தின் ஊடாக பதிவு செய்யலாம் - News View

About Us

About Us

Breaking

Saturday, January 2, 2021

வெளிநாட்டுப் பணியாளர்கள் தமது முறைப்பாடுகளை இணையத்தின் ஊடாக பதிவு செய்யலாம்

நாட்டில் காணப்படும் தற்போதைய நிலமைகள் காரணமாக வெளிநாடுகளில் பணி புரிவோரின் முறைப்பாடுகளை இணைய வழியாக அனுப்புவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, வெளிநாடுகளில் உள்ள பணியாளர்கள் அவர்களது உறவினர்களுக்கு ஏதேனும் முறைப்பாடுகள் இருப்பின் அறிவிக்க முடியும். 

www.slbfe.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும்.

பணியாளர்களின் பயணச்சீட்டு இலக்கம், பெயர், தொலைபேசி இலக்கம் மற்றும் முறைப்பாடுகளை இதன் ஊடாக பதிவேற்ற முடியும். 

முறைப்பாடு தொடர்பான இலக்கமும் அந்தத் தருணத்தில் கையடக்கத் தொலைபேசிக்கு SMS ஊடாக கிடைக்கப் பெறும் எனவும் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment