துறைமுக தொழிற்சங்கத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்படும் - ரோஹித அபேகுணவர்தன - News View

About Us

About Us

Breaking

Saturday, January 23, 2021

துறைமுக தொழிற்சங்கத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்படும் - ரோஹித அபேகுணவர்தன

(இராஜதுரை ஹஷான்)

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் குறித்து துறைமுக தொழிற்சங்கத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்படும்.

அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிராக முன்னெடுக்கும் போராட்டங்களின் பின்னணியில் அரசியல் நோக்கங்கள் மறைந்துள்ளன.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு வழங்கும் போது துறைமுக ஊழியர் சங்கத்தினர் எதிர்க்கவில்லை என துறைமுக மற்றும் கப்பற்துறை அபிவிருத்தி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

துறைமுக ஊழியர் தொழிற்சங்கத்தினர் நேற்று வெள்ளிக்கிழமை முன்னெடுத்த போராட்டம் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment