யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேர் உணவு தவிர்ப்புப் போராட்டம் - News View

About Us

About Us

Breaking

Saturday, January 9, 2021

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேர் உணவு தவிர்ப்புப் போராட்டம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டமைக்கு கண்டனம் வெளியிட்டும் கோரிக்கைகளை முன்வைத்தும் 9 மாணவர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான வாயிலுக்கு வெளிப்புறத்தில் இந்த உணவு தவிர்ப்புப் போராட்டத்தை மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர்.

இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீள அமைக்க அனுமதிக்க வேண்டும், பல்கலைக்கழக வளாகத்தைவிட்டு பொலிஸார் விலக வேண்டும் ஆகிய இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தே மாணவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

வீதியில் கொட்டகை அமைத்து போராட்டம் நடத்த யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், நேரில் சென்று அனுமதியளித்தார்.

அவர்களை சுய தனிமைப்படுத்தவும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தவும் பெயர் விவரங்கள் பொலிஸாரால் பெறப்பட்டுள்ளன.

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், பல்கலைக்கழக நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் நேற்று இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டது.

இதனை அறிந்து மாணவர்களும் அரசியல் பிரதிநிதிகளும் சமூக ஆர்வலர்களும் பல்கலைக்கழக பிரதான வாயிலில் நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

யாழ். நிருபர் பிரதீபன்

No comments:

Post a Comment