அரசாங்கம் அனைத்து இன மக்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் பொறுப்புடன் செயற்படுகிறது - விதுர விக்கிரமநாயக்க - News View

About Us

About Us

Breaking

Sunday, December 13, 2020

அரசாங்கம் அனைத்து இன மக்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் பொறுப்புடன் செயற்படுகிறது - விதுர விக்கிரமநாயக்க

(இராஜதுரை ஹஷான்) 

அரசாங்கம் அனைத்து இன மக்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் பொறுப்புடன் செயற்படுகிறது. இனவாத கருத்துக்களை சமூகத்தின் மத்தியில் எதிர்தரப்பினரே தோற்றுவித்துள்ளார்கள் என தேசிய மரபுரிமை, கிராமிய கலை அபிவிருத்தி மற்றும் கலாச்சார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று சனிக்கிழமை மத வழிபாட்டு நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், நாட்டு மக்களின் உரிமைகளை பாதுகாக்க அரசாங்கம் பொறுப்புடன் செயற்படுகிறது. கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை காரணம் காட்டி எதிர்தரப்பினர் சமூகத்தின் மத்தியில் இனவாத கருத்துக்களை தோற்றுவித்துள்ளார்கள்.

தேசிய மரபுரிமைகளையும், மக்களின் கலாசாரத்தையும் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய மரபுரிமை என அடையாளப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் தொல்பொருள் சின்னங்கள் திட்டமிட்ட வகையில் அழிக்கப்பட்டுள்ளன. இவை குறித்து உரிய அவதானம் செலுத்தப்பட்டுள்ளன.

அனைத்து இன மக்களின் தேசிய மரபுரிமை மற்றும் கலை கலாசாரங்கள் பாதுகாக்கப்படும். கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் எவ்வின மக்களின் உரிமைகளும் பாதிக்கப்படவில்லை என பிரதமர் தெளிவுபடுத்தியுள்ளார். ஆகவே நாட்டு மக்கள் அனைவரும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment