நாவல்காடு பகுதியில் காணப்பட்ட மனித எச்சங்களை மீட்கும் பணிகள் ஆரம்பம்! - News View

About Us

About Us

Breaking

Thursday, December 31, 2020

நாவல்காடு பகுதியில் காணப்பட்ட மனித எச்சங்களை மீட்கும் பணிகள் ஆரம்பம்!

முல்லைத்தீவு - முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவல்காடு பகுதியில் நேற்று இனங்காணப்பட்ட மனித எச்சங்களை மீட்கும் பணிகள் நீதிமன்ற அனுமதிக்கு அமைவாக இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் பதில் நீதிபதி ந.சுதர்சன் முன்னிலையில் குறித்த அகழ்வு மற்றும் மீட்பு பணிகள் இடம்பெற்றன.

தடயவியல் பொலிஸார், பொலிஸார் மற்றும் சட்ட வைத்திய அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் இணைந்து குறித்த மனித எச்சங்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது, நைலோன் சாரம், t-shirt, மண்டையோடு மற்றும் எலும்புகள் உள்ளிட்ட தடயப் பொருட்கள் மீட்கப்பட்டன.

மேலும் இந்த விடயம் தொடர்பாக முள்ளியவளை பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் இணைந்து தொடர் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர்.

No comments:

Post a Comment