கொவிட் முடிவுகள் அறிவியல் அடிப்படையில் எடுக்கப்பட வேண்டும் - விரைவில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவேன் - News View

About Us

About Us

Breaking

Saturday, December 26, 2020

கொவிட் முடிவுகள் அறிவியல் அடிப்படையில் எடுக்கப்பட வேண்டும் - விரைவில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவேன்

கொவிட் 19 தொடர்பான முடிவுகள் முறையான அறிவியல் அடிப்படையில் எடுக்கப்பட வேண்டும் என்று தலைமை பதவியில் இருக்கும் மகா நாயக்க தேரர் தன்னுடன் உடன்பட்டதாகவும் இது குறித்து விரைவில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவேன் என்றும் அவர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்தார்.

அமராபுரா மகா நிகாயா, அகமஹா பண்டித கோட்டுகொட தம்மவாச மகா தேரருடன் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் உள்ளிட்ட பிரதிநிதிகள் நேற்று முன்தினம் கலந்துரையாடினார்.

தேசிய ஐக்கியத்துக்கான பாக்கீர் மாக்கார் நிலையம் சர்பாக இக்கலந்துரையாடல் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூர்ய மற்றும் தேசிய ஐக்கியத்திற்கான பாக்கிர் மாக்கார் நிலையத்தின் செயலாளர் ஹெரஸ் பெர்னான்டோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment