2021 ஆண்டில் அரச ஊழியர்களை கடமைக்கு அழைக்கும்போது நிறுவனத் தலைவர்களின் தேவைக்கேற்பவே அழைக்கப்படல் வேண்டுமென பொது நிர்வாக மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிரி கேட்டுள்ளார்.
இதேவேளை கொரோனா தொற்று நிலைமைகளை கருத்தில் கொண்டு அவசியமான நபர்கள் பணிக்கு அழைக்கப்படுவது போதுமானதெனவும் குறிப்பிட்டுள்ளார்.
குறிபாபாக கொரோனா கட்டுப்பாடு வழமைக்கு திரும்பி விட்டதென சுகாதார அமைச்சு அறிவிக்கும் பட்சத்தில் சகல ஊழியர்களும் கடமைக்கு திரும்புவது தொடர்பான சுற்று நிருபம் அனுப்பி வைக்கப்படுமெனவும் செயலாளர் ஜே. ஜே.ரத்னசிரி மேலும் தெரிவித்துள்ளார்.
நற்பிட்டிமுனை நிருபர்
No comments:
Post a Comment