சுகாதார பரிசோதர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பம் - News View

About Us

Add+Banner

Thursday, December 3, 2020

demo-image

சுகாதார பரிசோதர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பம்

cb18df5e5202e1294ee9ee26b3609b87_XL
பண்டாரகம அட்டுளுகம பிரதேசத்தில் பொது சுகாதார பரிசோதர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவரை அழைத்துச் செல்ல முயன்ற போது அதனை தடுத்து பொது சுகாதார பரிசோதகரின் கடமைகளுக்கு இடையுறு விளைவித்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக விசேட பொலிஸ் குழு விரிவான விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்தோடு தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 35 பேர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்படி இதுவரையில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 987 ஆகும்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *