மட்டக்களப்பு - கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச சபையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையின் வருடாந்த வரவு செலவுத் திட்ட பிணக்குடன் தொடர்புபடுத்தி எதிர்க்கட்சியினரால் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு ஏற்ப ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச சபை உறுப்பினர் இம்தியாஸ் நேற்று (12) வாழைச்சேனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
பிரதேச சபை உறுப்பினர் இன்று (13) வாழைச்சேனை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது பிரதேச சபை உறுப்பினர் இம்தியாஸிக்கு ஆதரவாக சட்டத்தரணி ஹபீப் றிபான் தலைமையிலான சட்டத்தரணி றியாஸ் மற்றும் சட்டத்தரணி சனூஸ் நளீமி ஆகியோர் அடங்கிய சட்டத்தரணிகள் குழு ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு - கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையில் 2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் அமைதியின்மைக்கு மத்தியில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment