'மக்கள் ஒன்று கூடினால் வைரஸ் வேகமாக பரவும்' : நுவரெலியா மாவட்ட செயலாளர் எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 29, 2020

'மக்கள் ஒன்று கூடினால் வைரஸ் வேகமாக பரவும்' : நுவரெலியா மாவட்ட செயலாளர் எச்சரிக்கை

நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், எதிர்வரும் ஜனவரி மாதம் நிறைவடையும் வரை சிவனொளிபாத மலைக்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு நுவரெலியா மாவட்ட செயலாளர் எம்.பி.ஆர். புஷ்பகுமார கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, "நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 400 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் மக்கள் ஒன்று கூடினால் வைரஸ் வேகமாக பரவும் அபாயம் இருப்பதாகவும், நெருக்கடி நிலைமை தொடர்பில் சுகாதார தரப்புடன் ஆலோசனை நடத்தினோம் எனவும், இதன் பிரகாரம் ஜனவரி மாதம் நிறைவடையும் வரை சிவனொளிபாத மலைக்கு யாத்திரை வர வேண்டாம் என பக்த அடியார்களிடம் கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

மேலும், தற்போதைய நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்தால், சுகாதார நடைமுறைகள் மற்றும் சில கட்டுப்பாடுகளுடன் பெப்ரவரி மாதம் முதல் சிவனொளிபாத மலைக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment