மஹர சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் அவசியம் - வலியுறுத்தியுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை - News View

About Us

Add+Banner

Breaking

  

Wednesday, December 2, 2020

demo-image

மஹர சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் அவசியம் - வலியுறுத்தியுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை

%25E0%25AE%259A%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%25B5%25E0%25AE%25A4%25E0%25AF%2587%25E0%25AE%259A-%25E0%25AE%25AE%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%25A9%25E0%25AE%25BF%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%2581%25E0%25AE%259A%25E0%25AF%258D-%25E0%25AE%259A%25E0%25AE%25AA%25E0%25AF%2588
(நா.தனுஜா)

மஹர சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகளினால் உடனடியானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம் என்று சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் விரைவில் விடுதலையாகவுள்ள மற்றும் பொதுமக்களுக்கு மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்தாத கைதிகளை உடனடியாக விடுதலை செய்வதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

மஹர சிறைச்சாலையிy; இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டு இவ்வாறு வலியுறுத்தியுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் மற்றும் சிறைச்சாலையில் கைதிகளின் எண்ணிக்கையில் உயர்வு ஆகிய காரணங்களினால் கைதிகள் மத்தியில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து சிலர் மரணித்திருப்பதுடன் பலர் காயமடைந்துள்ளமை பற்றிய செய்திகள் வெளியாகியுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகளினால் உடனடியானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

இந்த சம்பவத்தின் அடிப்படை மற்றும் பின்னணிக்காரணிகள் தொடர்பிலும் விசாரணைகளின் போது அவதானம் செலுத்தப்பட வேண்டும். மஹர சிறைச்சாலை சம்பவம், கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக தமது பாதுகாப்பு குறித்து சிறைக் கைதிகளின் மத்தியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை நன்கு வெளிப்படுத்தியிருக்கிறது.

தற்போது வரை நாடளாவிய ரீதியிலுள்ள சிறைச்சாலைகளிலிருந்து குறித்தளவான சிறைக் கைதிகள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்கிறார்கள்.

இந்நிலையில் சிறைச்சாலைகளில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலையைக் கையாள்வதற்கு நூற்றுக்கணக்கான கைதிகளை விடுவிக்கும் தமது கடப்பாட்டை இலங்கை அதிகாரிகள் நடைமுறைப்படுத்த வேண்டும். அதனைச் செய்யத் தவறுவதென்பது மேலும் பல கைதிகள் தொற்றுக்குள்ளாவதற்கும் சிறைச்சாலைகளுக்கும் மோதல்கள் அதிகரிப்பதற்குமே வழிவகுக்கும்.

எனவே சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் விரைவில் விடுதலையாகவுள்ள மற்றும் பொதுமக்களுக்கு மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்தாத கைதிகளை உடனடியாக விடுதலை செய்வதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டறிவதற்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை உள்ளடங்கலாக அனைத்து சிறைக் கைதிகளுக்கும் பாரபட்சமற்ற சுகாதாரப் பாதுகாப்பு வசதிகள் கிடைக்கப் பெறுவதனையும் உரிய அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும்.

அத்தோடு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சிறைக் கைதிகளை அவர்களது உறவினர்கள் பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கைதிகள் அவர்களது குடும்பத்தினருடன் தொடர்பு கொள்வதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும் என்று மன்னிப்புச் சபையின் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *