கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்பாக ஏ-09 நெடுஞ்சாலையில் ஓரத்தில் நின்றிருந்த பாலைமரம் சரிந்து வீழ்ந்ததில் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்கு வரத்து தடைப்பட்டதுடன் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டிருந்தது. இன்று மாலை 6 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த அரச பேருந்து நூலிழையில் விலத்தியதால் பயணிகள் மிகப் பெரிய ஆபத்திலிருந்து தப்பித்துள்ளனர். சரிந்து வீழ்ந்த மரத்தின் கிளைகள் பேருந்தில் வீழ்ந்துள்ளன.
மரத்தினை அகற்றும் நடவடிக்கையினை கரைச்சி பிரதேச சபை முன்னெடுத்திருந்தது. தற்போது போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.
இவ்வாறான இடர் ஏற்படும் சந்தர்ப்பங்களில் அரச மர கூட்டுத்தாபனம் அசமந்த போக்கில் இருப்பது தொடர்பில் மக்கள் கவலை வெளியிட்டுள்ளதாக பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி நிருபர் நிபோஜன்
No comments:
Post a Comment