ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மாடுகளைத் திருடி இறைச்சிக்காக வெட்டிய ஐந்து திருடர்களை ஏறாவூர்ப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்களிடமிருந்து இரண்டு மாடுகள் முச்சக்கர வண்டி மற்றும் இரண்டு மாடுகளில் வெட்டப்பட்ட இறைச்சி என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எச்.டபிளியு.கே. ஜயந்த தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை (25.12.2020) அதிகாலை 2 மணியளவில் இக்கைது இடம்பெற்றதாக பொலிஸார் கூறினர்.
இம்மாடுகள் மயிலம்பாவெளி பிரதேசத்திலுள்ள நபர் ஒருவருக்குச் சொந்தமானவை. கடந்த மூன்று தினங்களில் அப்பண்ணையாளரது பத்து மாடுகள் காணாமல் போயுள்ளதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இம்மாடுகள் ஐயங்கேணி பிரதேசத்தில் வெட்டப்பட்ட நிலையில் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. வெட்டப்பட்ட மாடுகளில் ஒன்றின் வயிற்றில் கன்று காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஏறாவூர்ப்பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment