பிணவறையில் இருந்து எழுந்தவர் மீண்டும் மருத்துவமனையில் உயிரிழப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, December 7, 2020

பிணவறையில் இருந்து எழுந்தவர் மீண்டும் மருத்துவமனையில் உயிரிழப்பு

கென்யாவில் பிணவறையில் இருந்து கடந்த வாரம் உயிர் பெற்று எழுந்த நபர் ஒருவர் உண்மையாக உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இறுதிக் கிரியைகளுக்காக, உடலைப் பதப்படுத்த தயார்படுத்தும்போது அந்த ஆடவர் விழித்தெழுந்து கூச்சலிட்டதாக பிணவறை தொழிலாளர் ஒருவர் கடந்த வாரம் கூறி இருந்தார்.

நாட்பட்ட நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்ட 32 வயதான பீட்டர் கிகேன் என்ற அந்த ஆடவர் பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 

தாம் உயிருடன் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று அவர் கடந்த வியாழக்கிழமை கென்யாவின் டெய்லி நேசன் பத்திரிகைக்கு குறிப்பிட்டிருந்தார். ‘இறைவனால் நான் எழுப்பப்பட்டேன்’ என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

குறித்த நபரை பிணவறைக்கு அனுப்புவதில் அவரது உறவினர்களே முன்வந்ததாக, அவரை பார்வையிட்ட வைத்தியர் தெரிவித்துள்ளார். ஆயினும் குறித்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டு சுகாதாரப் பிரிவினர் கோரி வருகின்றனர்.

இந்த சம்பவம் கென்யாவில் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து இது குறித்து விசாரிப்பதற்கு உள்ளூர் நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அவர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட போது அவரது நிலை மோசமாகக் காணப்பட்டதாக, இறுதியாக அனுமதிக்கப்பட்ட வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment