கிரீஸ் நாட்டில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவருக்கு அலர்ஜி - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 30, 2020

கிரீஸ் நாட்டில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவருக்கு அலர்ஜி

கிரீஸ் நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் ஒருவருக்கு லேசான அலர்ஜி உண்டானது. ஆனால் சிகிச்சைக்கு பின் அது சரி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளை புரட்டி எடுத்த கொரோனா வைரசை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி உள்ளன. இங்கிலாந்து, அமெரிக்கா, சவுதி அரேபியா போன்ற நாடுகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கிரீஸ் நாட்டில் கொரோனாவுக்கு எதிரான பைசர் தடுப்பூசிக்கு அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து, அந்நாட்டு மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இந்த நிலையில், நேற்று அங்குள்ள ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் ஒருவருக்கு லேசான அலர்ஜி உண்டானது. ஆனால் சிகிச்சைக்கு பின் அது சரி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment