தீயணைப்பு சேவை திணைக்களத்தைத் தொடர்பு கொள்ள புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
கொழும்பு மாநகராட்சியின் தீயணைப்பு சேவைத் துறையின் அவசர தொலைபேசி இலக்கம் சீரற்ற வானிலை காரணமாகத் தற்காலிகமாகச் செயலிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், குறித்த தொடர்பு இலக்க சேவையை வழமைக்குக் கொண்டுவரும் வரையில், பொதுமக்கள் அவசர நிலையின்போது, தீயணைப்பு சேவை திணைக்களத்தைத் தொடர்பு கொள்வதற்கு புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி 0112-422222, 071-4466232 அல்லது 071-4274161 என்ற இலக்கங்கள் ஊடாக தீயணைப்பு சேவை திணைக்களத்தைத் தொடர்பு கொள்ள முடியும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment