(சர்ஜுன் லாபீர்)
கல்முனை அஹ்மத் அலி வைத்தியசாலையில் 21 வயதுடைய இளைஞர் ஒருவருக்கு பித்தப்பையுனுள் இருந்த நூற்றுக்கணக்கான கற்கள் அகற்றப்பட்டுள்ளன்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், கல்முனை அஹ்மத் அலி வைத்தியசாலையில் வயிற்று நோவு காரணமாக அனுமதிக்கப்பட்ட 21 வயதுடைய நபர் ஒருவருக்கு கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் பொது சத்திர சிகிச்சை நிபுனர் டாக்டர் ஏ.டப்ளியு.எம். சமீம் தலைமையிலான வைத்திய குழுவினர் மேற்கொண்ட சத்திர சிகிச்சையில் மிக நுனுக்கமான முறையில் பித்தப்பையுனுள் இருந்த நூற்றுக்கணக்கான கற்கள் வெற்றி கரமாக அகற்றப்பட்டுள்ளது.
குறித்த நோயாளி சத்திர சிகிச்சையின் பின்னர் நல்ல தேகாரோக்கியத்துடன் உள்ளார். என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment