அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் 01ஆம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக, திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர். நேற்று (10) இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் (09) மாலை தனது தென்னந்தோட்ட காணிக்கு சென்ற குறித்த நபர், இரவாகியும் வீடு திரும்பாத நிலையில் வீட்டார் அவரை தேடி சென்ற வேளை தோட்டக் காணியில் உள்ள சிறிய நீர் தேங்கிய குழி ஒன்றினுள் அவர் சடலமாக கிடப்பதை அவதானித்துள்ளனர்.
அத்துடன் அவரின் மோட்டார் சைக்கிள், தலைக்கவசம், மோட்டார் சைக்கிள் திறப்பு மற்றும் முகக் கவசங்கள் என்பனவும் அவருடையது என உறவினர்கள் அடையாளம் கண்டதைத் தொடர்ந்து திருக்கோவில் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இதனையடுத்து திருக்கோவில் பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து இடத்தினை அடையாளப்படுத்தியதுடன், மரணம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை குற்றத் தடயவியல் பொலிசாருடன் முன்னெடுத்து வருகின்றனர்.
இவ்வாறு மரணமடைந்த குறித்த நபர் தம்பிலுவில் 01ஆம் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் இவர் 57 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என்றும் இவர் அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் தாதி உத்தியோகத்தராக கடமை புரிந்து வருகின்றவர் என்றும் அவரது பிள்ளைகளின் ஆரம்பக்கட்ட விசாரணைகள் ஊடாக தெரியவந்துள்ளது.
(திருக்கோவில் நிருபர் எஸ். கார்த்திகேசு)
No comments:
Post a Comment