வயல் வேலையில் ஈடுபட்டிருந்த விவசாயி சடலமாக மீட்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 11, 2020

வயல் வேலையில் ஈடுபட்டிருந்த விவசாயி சடலமாக மீட்பு

புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட விசுவமடு, இளங்கோபுரத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

3 பிள்ளைகளின் தந்தையான மாரிமுத்து சுதாகரன் (41) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று (11) காலை வயலில் வரம்பு வெட்டிக் கொண்டிருந்தபோது, இவர் வயலில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக, இவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு பொலிசார் விசாரணை நடத்தியுள்ளதுடன், பிரேத பரிசோதனைக்காக சடலம் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

(புதுக்குடியிருப்பு விசேட நிருபர் - முல்லைக்கீதன்)

No comments:

Post a Comment