கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் அவசர அம்பியூலன்ஸ் வண்டி சேவைகளை பெற்றுக் கொள்ள புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்படுத்தியுள்ளது.
அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அவசர தேவையின் போது அம்பியூலன்ஸ் வண்டிகளை வர வழைத்து கொள்ள தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, 011 3422558 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு அம்பியூலன்ஸ் வண்டி சேவையைப் பெற்றுக் கொள்ளலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிவிப்பின் பேரில் இந்த இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment