உக்ரைன் நாட்டின் ஜனாதிபதிக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Monday, November 9, 2020

உக்ரைன் நாட்டின் ஜனாதிபதிக்கு கொரோனா

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 216 நாடுகள்/பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த கொடிய வைரசுக்கு பொதுமக்கள் முதல் உலக நாடுகளின் தலைவர்கள் வரை அனைவரும் இலக்காகி வருகின்றனர். 

குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், இங்கிலாந்து பிரதமர் ஜான்சன், பிரேசில் ஜனாதிபதி போல்சனேரோ, போலாந்து ஜனாதிபதி அண்ட்ரிஜ் டூடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட போதும் உரிய சிகிச்சைக்கு பின்னர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், வைரஸ் பரவிய உலக நாடுகளின் தலைவர்கள் பட்டியலில் தற்போது உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கியும் இணைந்துள்ளார். உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கு இன்று (9) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து, அறிகுறிகள் எதுவும் இல்லாததால் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டதாகவும், மருத்துவர்களின் அறிவுரைகளை பின்பற்றி வைரஸ் பாதிப்பில் இருந்து கூடிய விரைவில் குணமடைந்து விடுவேன் என்று ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

ஆனாலும், தனது ஜனாதிபதி பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள உள்ளதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த ஜூன் மாதம் ஜனாதிபதியாக வோலோடிமிர் ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலேனா ஜெலன்ஸ்காவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  இதையடுத்து அவர் உரிய சிகிச்சை மேற்கொண்டு தற்போது பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment