இரட்டைப் படுகொலை வழக்கு - பிரசாந்தனின் விளக்கமறியல் நீடிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, November 23, 2020

இரட்டைப் படுகொலை வழக்கு - பிரசாந்தனின் விளக்கமறியல் நீடிப்பு

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தனின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் இந்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) இணையத்தின் ஊடாக இடம்பெற்றபோதே நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

அதற்கமைய பூ.பிரசாந்தனை எதிர்வரும் டிசம்பர் 07ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பூபாலப்பிள்ளை பிரசாந்தன், 9ம் திகதி காலை கொழும்பில் இருந்து சென்ற சி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டார்.

ஆரையம்பதியில் கடந்த 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைப் படுகொலை தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த அவர், ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் குறித்த வழக்கின் சாட்சியங்களை அச்சுறுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைய பிரசாந்தன் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment