ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார் - ஒப்புக் கொண்டார் டிரம்ப் - News View

About Us

About Us

Breaking

Sunday, November 15, 2020

ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார் - ஒப்புக் கொண்டார் டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளதாக டிரம்ப் முதல் முறையாக ஒப்புக் கொண்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் 290 தேர்தல் வாக்குகளுடன் வெற்றி பெற்றார். ஆனால் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் 232 தேர்தல் வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்துள்ளார்.

தேர்தலில் தோல்வியடைந்த போதும் தனது தோல்வியை ஏற்க ஜனாதிபதி டிரம்ப் மறுத்து வருகிறார். மேலும், தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி கோர்ட்டில் வழக்கு தொடர்வேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜோ பைடன் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக ஜனாதிபதி டிரம்ப் முதல் முறையாக ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால், தேர்தல் மோசடியானது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். 

இது தொடர்பாக, ஃப்க்ஸ் நியூஸ் செய்தி நிறுவனத்தின் டுவிட்டரை மேற்கொள் காட்டி ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘அவர் (ஜோ பைடன்) வெற்றி பெற்றுள்ளார். ஏனென்றால் இந்த தேர்தல் மோசடியானது. வாக்கு எண்ணிக்கையில் வாக்கு கண்காணிப்பாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இடதுசாரி சித்தாந்தம் கொண்ட டொமினியன் என்ற தனியார் நிறுவனத்தின் மூலம் வாக்குகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

நன்மதிப்பற்ற அந்நிறுவனத்தின் மோசமான உபகரணங்களால் டெக்சாசில் கூட தகுதி பெற முடியாது (நான் அதிக வாக்குகளில் வெற்றி பெற்ற இடம்). மேலும், போலி, அமைதியான ஊடகங்கள் மற்றும் இன்னும் சிலவற்றால் பைடன் வெற்றி பெற்றுள்ளார். என பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment