மஹர சிறைச்சாலை கலவரத்தினால் காயமடைந்த 26 கைதிகளுக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Monday, November 30, 2020

மஹர சிறைச்சாலை கலவரத்தினால் காயமடைந்த 26 கைதிகளுக்கு கொரோனா

நீர்கொழும்பு, மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் 71 பேர் காயமடைந்த நிலையில் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அவர்களில் 48 பேருக்கு துரித என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ராகம வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மோதல் சம்பவத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மஹர சிறைச்சாலையில் நேற்று மாலை முதல் இடம்பெற்ற மோதல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இந்த மோதலில் இதுவரை எட்டுப் பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment